உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு குறைந்து வருகின்றது: புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன
Page 1 of 1
உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு குறைந்து வருகின்றது: புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன
அரசாங்க உளவுப் பிரிவைக் கொண்டு எடுக்கப்பட்ட விசேட கருத்துக் கணிப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு 51 வீதமாக இருக்கின்ற போதிலும், அது நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருவதாக பிரஸ்தாப புலனாய்வு அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் என்பனவே அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைய பிரதான காரணங்களாக புலனாய்வுத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக குருநாகல், மொனராகலை, மாத்தறை உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலக அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு 51 வீதமாக இருக்கின்ற போதிலும், அது நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருவதாக பிரஸ்தாப புலனாய்வு அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகள் என்பனவே அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைய பிரதான காரணங்களாக புலனாய்வுத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக குருநாகல், மொனராகலை, மாத்தறை உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் அரசாங்கம் தோல்வியைத் தழுவும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலக அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
MayA- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|