அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்

Go down

கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்  Empty கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்

Post by kaavalan Fri Feb 25, 2011 1:28 am

கடந்த காலங்களில் கொழும்பில் தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களுக்கு ஒத்தாசையாகச் செயற்பட்ட எண்மருக்கு கொழும்பு நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களினை நடாத்தியவர்களுக்குத் தங்குமிடம், போக்குவரத்து, தாக்குதலுக்கான புலனாய்வுத் தகவல்களைப் பெற உதவி செய்தல் போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எண்மருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் தனித்தனியாக கைது செய்யப்பட்ட அவர்கள் எண்மரும் நேற்று கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பிரஸ்தாப சந்தேக நபர்கள் எண்மரும் பல இடங்களில் மறைவாகத் தங்கி தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடம் தொடர்ந்தும் தகவல்களைப் பெற விசாரணை நடாத்த அனுமதிக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிசார் விடுத்த வேண்டுகோளுக்கும் நீதிபதி அனுமதியளித்தார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum