அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! 15ம் திகதி வரை விளக்கமறியல்

Go down

மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! 15ம் திகதி வரை விளக்கமறியல்  Empty மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! 15ம் திகதி வரை விளக்கமறியல்

Post by kaavalan Mon Apr 04, 2011 1:16 pm

மட். அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்தில் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படவிருந்த உரத் தொகையொன்றை சட்ட விரோதமாக எடுத்துச் செல்ல முனைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் உந்துருளியொன்றை திருடிய குற்றச்சாட்டில் வேறு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 லட்சத்து 19 ஆயிரத்து 692 ரூபா பெறுமதியான உரத் தொகை பாரவூர்தி யொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு பூம்புகார் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உந்துருளியொன்றை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொக்குவில் பொலிஸ் சோதனைச் சாவடியை கடந்து செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதிமன்ற நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளனர்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது
» விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது
» புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு மே 9 வரை விளக்கமறியல் நீடிப்பு
» ஐ.நா.வின் நிபுணர் குழுவிடம் சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது
» தமிழினியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum