அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது

Go down

அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது  Empty அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது

Post by Admin Mon Feb 28, 2011 5:21 am

அம்பாறைப் பிரதேசத்தில் கப்பம் பெறுதல் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோயில் பிரதேசத்தின் நாவலடியைச் சோ்ந்த திருச்சந்திரன் சுரேந்திரன் (கரண்ட்) என்பவரே அவ்வாறு கப்பம் பெறல் மற்றும் பணமோசடிக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பவராவார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் அவர் அம்பாறைப் பிரதேசத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக செயற்பட்டவர் என்பது பிரதேச வாசிகளிடமிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

அதனைப் பயன்படுத்தி அவர் பிரதேசத்தின் செல்வந்த வர்த்தகர்களிடமிருந்து கப்பம் பெறல் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆயினும் அவர் மீதுள்ள அச்சம் காரணமாக இதுவரை யாரும் அவருக்கெதிராக பொலிசில் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திருமதி ராமகமலம் உத்தரவிட்டுள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது
» புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையில் விடுதலையாவர்
» முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் வசதி செய்துகொடுக்கப்படவுள்ளது
» ஐ.நா. அறிக்கையை ஆதரித்தால் “புலி” எதிர்த்தால் “சிங்கமா”?– பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum