அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருக்கோவிலில் கிணற்றில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Go down

திருக்கோவிலில் கிணற்றில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு  Empty திருக்கோவிலில் கிணற்றில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

Post by Admin Tue Mar 15, 2011 3:25 pm

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று வீட்டின் பின்பகுதியில் உள்ள கூவம் ஒன்றில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலையில் நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேசத்தில் சுனாமி அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேருபுரத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்ட இவ் வீட்டுத்திட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினம் மாலை 6 மணியளவில் உள்ள வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தாயார் தேடியபோது வீட்டின் பின்பகுதியில் தோண்டப்பட்டுள்ள கூவத்தில் குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகம் ஈழவேந்தன் ஒன்றரை வயது ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக என திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்வத்தில் உயிரிழந்த குழந்தையின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர்; பிரேத பரிசோதனைக்காக அம்பாறை போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடாபான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum