அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்

Go down

சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம் Empty சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்

Post by devid Thu Dec 09, 2010 9:26 pm

நாம் தமிழர் கட்சித் தலைவரும், இயக்குநருமான சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் சீமான் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.


இதை எதிர்த்து சீமான் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஒருவரைக் கைது செய்ய மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார்.


இதையடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தது செல்லாது என உத்தரவிட்டனர்
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்
» மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் சம்மேளனத்தின் மகாநாடு
» தமிழகத்தில் தமிழீழத் திருத்தாயின் திருவுருவத்திற்கு வீரவணக்கம் - சீமான்
» தேசிய தலைவரின் தாயார் காலமானார்
» ஈழ விடுதலைக்காக எவ்வளவோ தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் போகமாட்டார் - சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum