அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாமலின் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் பரீட்சையில் சித்தியில்லை

Go down

நாமலின் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் பரீட்சையில் சித்தியில்லை  Empty நாமலின் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் பரீட்சையில் சித்தியில்லை

Post by kaavalan Mon May 02, 2011 4:25 pm

கடந்த வருடம் கொழும்பு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற இறுதியாண்டு பரீட்சையில் சிறீலங்கா ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சித்தியடைந்துள்ளதாகவும், நாமலின் தில்லு முல்லுக்களை வெளிக்கொண்டுவந்த மாணவனை கல்லூரி நிர்வாகம் சித்தியடையவிடாது தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திஸாநாயக்கா துசார ஜெயரத்தின என்ற மாணவனே இந்த தகவல்களை கொழும்பு இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சட்டக்கல்லூரியில் 17988 என்ற பதிவு எண்ணைக்கொண்ட நானும் நாமாலுடன் பரீட்சைக்கு தோற்றியிருந்தேன். ஆனால் அன்று அங்கு நடைபெற்ற பரீட்சை முறைகேடுகளை ஊடகங்களுக்கும், சிறீலங்கா பொலிஸாருக்கும் தெரிவித்ததால் நான் மிரட்டப்பட்டும், கடத்தப்பட்டும் துன்புறுத்தப்பட்டேன்.

தற்போது என்னை சித்தியடையவிடாது தடுத்துள்ளனர், நான் பரீட்சைக்கு தோற்றவில்லை என சட்டக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது என துசார தெரிவித்துள்ளார்.

எனக்கு நேர்ந்த நெருக்கடிகள் தொடர்பில் சிறீலங்காவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை மேற்கொண்டபோதும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அதன் பின்னரே ஆசிய மனித உரிமைகள் அமைப்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum