அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி

Go down

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி Empty யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களின் நடத்தை குறித்து அதிருப்தி

Post by Admin Mon Oct 25, 2010 6:24 am

யாழ்ப்பாண பொது வைத்தியசாலையில் அகில இலங்கை மருத்துவ ஒழுங்கமைப்பின் நிகழ்வு ஒன்று நடைபெற்றிருந்த வேளையில், தென்னிலங்கையில் இருந்து வந்த சில சிங்கள சுற்றுலாப் பயணிகள் தகாத முறையில் நடந்துகொண்டதாக செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை சுமார் 30 பஸ் வண்டிகளில் வந்த சிங்களவர்களே அவ்வாறு நடந்துகொண்டதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண நூலகத்தின் வரவேற்பறையில் தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் நூலகத்தின் அறையில் பிரவேசிக்கக் கூடிய நேரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அந்த கால நேரம் தவறிய நிலையில் வார இறுதி நாளில் வந்த குறித்த சிங்களவர்கள், தம்மை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர் அந்த அறிவித்தல் பலகையையும் உடைத்து நொருக்கியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதும், சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்தனர்.

எனினும் குறித்த சிங்களவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் என தம்மை அடையாளம் காட்டி, பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து பொலிஸார் அங்கிருந்து வெளியேறினர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டக்களப்பில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம்
» ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தீர்க்கப்பட்டமையால் ஜனாதிபதிக்கு அதிருப்தி
» யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் சுற்றியவர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum