அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம்

Go down

மட்டக்களப்பில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம் Empty மட்டக்களப்பில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம்

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:07 am

மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் சிங்கள மக்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பட்டிப்பளை, பச்சைக்கொடி, சுவாமிமலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கெவிலியாமடு கறுவாசோலை கண்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 150 ஏக்கர் காணிகளில் சிங்கள் மக்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் சிங்களவர்கள், அத்துமீறியுள்ள தமிழர்களின் 150 ஏக்கர் காணியை மீட்டுத்தருமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மட்டக்களப்பில் 2010 காணியுரிமையாளர்கள் விவசாயச் செய்கையினை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் சில சிங்களவர்கள்; இரவோடு இரவாக அத்துமீறி நெல்லை விதைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டின் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்ப்படுவதாகவும் இரா துரைரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum