உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமை ஆணையகத்தில் சரணடைந்த குடும்பஸ்தர்
Page 1 of 1
உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமை ஆணையகத்தில் சரணடைந்த குடும்பஸ்தர்
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, யாழ். வர்த்தகரான குடும்பஸ்தர் ஒருவர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றிரவு சரணடைந்துள்ளார்.
உயிருக்கு ஆசைப்பட்டு, பயந்துகொண்டு வாழும் பெயர் வெளியிட மறைக்கப்பட்டுள்ள இவரின் வயது 35 ஆகும் என யாழ் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் யாழ். குடாநாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடையும் சம்பவம் இது என மேலும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இவரை யாழ். மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ். பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட இவர், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆசைப்பட்டு, பயந்துகொண்டு வாழும் பெயர் வெளியிட மறைக்கப்பட்டுள்ள இவரின் வயது 35 ஆகும் என யாழ் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் யாழ். குடாநாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடையும் சம்பவம் இது என மேலும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இவரை யாழ். மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ். பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட இவர், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
VeNgAi- பண்பாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|