அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வான்புலிகளும் தப்பிச் சென்றுள்ளனர்

Go down

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வான்புலிகளும் தப்பிச் சென்றுள்ளனர் Empty இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வான்புலிகளும் தப்பிச் சென்றுள்ளனர்

Post by rajeshwary Wed Feb 16, 2011 3:55 pm

இராணுவத்தினருடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வான்புலிகளும் தப்பித்துச் சென்றுள்ளதாக திவயின பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்ற ஏனைய விடுதலைப் புலி உறுப்பினர்கள் போன்று அவர்களில் சிலரும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைப் புலனாய்வுத்துறையினரை மேற்கோள் காட்டி அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் புதிதாக ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த டிசம்பர் மாதக் கடைசியில் தேவையான பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர்.

அவர்கள் கேரளாவிலும் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுள்ளதுடன், அது தொடர்பான குறும்படமொன்றையும் தயாரித்துள்ளமை குறித்து இந்திய உள்ளகப் பாதுகாப்பு அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் விடுதலைப் புலிகளின் மீள் ஒருங்கிணைப்பு மற்றும் ஆயுதப் பயிற்சிகள் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது
rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத்தரப்பால் தவறிழைக்கப்பட்டது உண்மை: அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க
» இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?
» யாழ். அனலைதீவில் யுவதியொருவரின் சடலம் மீட்பு! கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்ற காதலனும் கைது
» ஜனாதிபதி தனியாக வீதியில் சென்ற போது 3000 பாதுகாப்பு உத்தியோத்தகர்கள் கடமையில்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum