அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பில் பொலித்தீன் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Go down

மட்டக்களப்பில் பொலித்தீன் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது  Empty மட்டக்களப்பில் பொலித்தீன் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Post by Admin Tue Mar 01, 2011 5:40 pm

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புதிய பனிச்சையடியிலுள்ள மதகொன்றிலிருந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
திமிலதீவைச் சேர்ந்தவரும் தற்போது திருப்பெருந்துறையில் வசித்து வருபவருமான இராசையா காந்திதாஸ் (வயது 29) என அவரது அண்ணனான இராசையா மேகனதாஸ் குறித்த சடலத்தை மட்டக்களப்பு பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளார்.

தனது தம்பியை காணவில்லையென்று முறைப்பாடு செய்வதற்காக இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அண்ணனிடம், சடலத்துடன் காணப்பட்ட மோதிரத்தை பொலிஸார் காட்டியபோது தனது தம்பியின் மோதிரமென்று தெரிவித்தார்.

இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை நேரில் சென்று பார்வையிட்ட அண்ணன், இது தனது தம்பியினுடைய சடலமென பொலிஸாருக்கு அடையாளம் காட்டினார்.

திருப்பெருந்துறையிலிருந்து கடந்த சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனது உறவினரின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர் வீடு திரும்பாமையாலேயே, தான் பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்ததாக அண்ணன் தெரிவித்துள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டக்களப்பில் பொலித்தீன் பையில் அடைக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரினதும், ஏறாவூரில் பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்பு
» ஈழத்துரோகிகளை அடையாளம் காணவேண்டும் - வைகோ கோரிக்கை
» பார்வதியம்மாவின் அஸ்தியைச் சிதைத்து மகிழும் சிங்களம்! காட்டு மிராண்டித்தனத்தின் மொத்த அடையாளம்!
» மட்டக்களப்பில் கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது
» யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum