அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விலைவாசிக்கெதிராக களனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தலையிருக்காது: அமைச்சர் மோ்வின்

Go down

விலைவாசிக்கெதிராக களனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தலையிருக்காது: அமைச்சர் மோ்வின்  Empty விலைவாசிக்கெதிராக களனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தலையிருக்காது: அமைச்சர் மோ்வின்

Post by priyanka Wed Mar 02, 2011 1:35 pm

அதிகரித்துச் செல்லும் விலைவாசியைக் காரணம் காட்டி அரசாங்கத்துக்கு எதிராக யாராவது களனியில் ஆர்ப்பாட்டம் நடாத்த முயன்றால் அவர்களின் தலையிருக்காது என்று அமைச்சர் மோ்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

களனியைப் பொறுத்த மட்டில் பச்சை, சிவப்பு நிறங்களுக்கு கொஞ்சமும் இடமளிக்கப் போவதில்லை என்று வலியுறுத்தும் அவர், அதன் காரணமாக அந்தக் கட்சிக்காரர்களில் ஒருவரையாவது இம்முறை தோ்தலின் மூலம் தோ்ந்தெடுக்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் களனியில் நடைபெற்ற ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது களனி தப்பித்துக் கொண்டது தன் திறமையினால் என்று மார்தட்டிக் கொண்டுள்ள அமைச்சர், தொடர்ந்தும் தன் மீது நம்பிக்கை வைத்து தான் கைகாட்டுகின்றவர்களுக்கு வாக்களித்து, தனது பொறுப்பில் களனியின் உள்ளூராட்சி மன்றங்களைத் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» எகிப்தைப் போன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடாத்த முயன்றால் என் கைத்துப்பாக்கிதான் பதில் சொல்லும்: அமைச்சர் மோ்வின் சில்வா
» தோ்தல் கண்காணிப்புச் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கெதிரான சதி: அமைச்சர் மோ்வின் சில்வா
» துறைமுகத்தில் தொழில்வாய்ப்புக் கேட்டு அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்: சிங்கத்தின் குகைக்குள் ஆரம்பித்துள்ளதா சலசலப்பு?
» ஆஸி. கிறிஸ்மஸ்தீவு அகதிகள் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் - தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum