அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் தலைவரின் பதவி பறிக்கப்படும்: அரசாங்கம்

Go down

உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் தலைவரின் பதவி பறிக்கப்படும்: அரசாங்கம்  Empty உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் தலைவரின் பதவி பறிக்கப்படும்: அரசாங்கம்

Post by kaavalan Fri Apr 01, 2011 2:56 pm

இனி வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டம் தோல்வியுற்றால் அதன் தலைவர் அல்லது நகராதிபதியின் பதவி பறிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹொரணை நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் வைத்து சிரேஷ்ட அமைச்சர் ரத்தினசிரி விக்கிரமாநாயக்கவே அதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் அதன் தலைவர் மற்றும் நகராதிபதிகளின் பதவியைப் பறிப்பதற்கு ஏதுவான வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டங்கள் தோல்வியடைந்திருந்தன. அவ்வாறு இனிமேல் நடக்காமல் இருக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தலைவர் மற்றும் நகராதிபதிகளை நெருக்கடிக்குள் வைத்திருக்க விரும்புவதையே அமைச்சர் விக்கிரமநாயக்கவின் கூற்று புலப்படுத்துகின்றது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum