அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாங்கள் வீடுகள் கேட்கவில்லைஉணவு கேட்கவில்லை கடத்தப்பட்ட எங்கள் பி;ள்ளையைகணவன்மாரை மீட்டுத்தாருங்கள்

Go down

நாங்கள் வீடுகள் கேட்கவில்லைஉணவு கேட்கவில்லை கடத்தப்பட்ட எங்கள் பி;ள்ளையைகணவன்மாரை மீட்டுத்தாருங்கள்  Empty நாங்கள் வீடுகள் கேட்கவில்லைஉணவு கேட்கவில்லை கடத்தப்பட்ட எங்கள் பி;ள்ளையைகணவன்மாரை மீட்டுத்தாருங்கள்

Post by kaavalan Fri Feb 18, 2011 4:05 am

இங்குள்ள மக்கள் வீடுகேட்கின்றார்கள்உணவு கேட்கின்றார்கள்வீதி கேட்கின்றார்கள் நாங்கள் கேட்பது கடத்தப்பட்ட எங்களது பிள்ளையைகணவர்மாரை மீட்டுத்தாருங்கள் என கண்ணீர் மல்க தாய்மார் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் வேண்டுகோள்விடுத்தனர்.



கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட புல்லுமலை பகுதிக்குட்பட்ட கோப்பாவெளி மக்களே இந்தவேண்டுகோளை கதறி அழுதவண்ணம் விடுத்தனர்.

அப்பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கச்சென்றபோதே இவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தனர்.

எங்களது பிள்ளைகள்கணவன்மார் எங்களுடன் இருந்தால் நாங்கள் யாரிடமும் கையேந்தவேண்டிய தேவையில்லை காணாமல்போன எங்களது பிள்ளைகளை மீட்டுத்தந்தால் போதும் என இவர்கள் பிரதியமைச்சரிடம் முறையிட்டனர்.

வேளான்மை அறுவடைசெய்யச்சென்றபோது தனது கணவர் தனக்கு முன்பாகவே தணது கணவனை அழைத்துச்சென்றதாகவும் அழைத்துச்சென்று ஒன்றரைவருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை அவர் குறித்து எதுவித தகவலும் இல்லையென பெண்னொருவர் முரளிதரனிடம் தெரிவித்தார்.

தனக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளதாகவும் தான் பெறும் வறுமை நிலையில் வாழ்வதாகவும் தனது கணவர் தன்னுடன் இருந்தால் தனக்கு ஒருவேளை உணவாவது தருவார் எனவும்அப்பெண் கதறியவாறு தெரிவித்தார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum