கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
Page 1 of 1
கடத்தப்பட்ட லண்டன் இளைஞர் நேற்று விடுவிக்கப்பட்டார்
லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு சுமார் 24 மணித்தியாலங்களின் பின்னர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
29 வயதுடைய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டதாக சாவகச்சேரி காவல்துறை, மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டிருந்தது.
இவர் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்த நிலையில் மாணவர் வீசா மூலம் அண்மையிலேயே லண்டனுக்கு சென்றிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நாடு திரும்பியிருந்த இவர் யாழ்ப்பாண நகரப்பகுதியில் வைத்து வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டிருந்தார்.
சுமார் 24 மணித்தியாலங்களுக்கு பின்னர் இவர் கைகள், கண்கள் கட்டப்பட்டு யாழ்ப்பாண புறநகர் பகுதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் இவர் மீட்கப்பட்டது தொடர்பாக குடும்பத்தவர்கள் சாவகச்சேரி காவல்நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
29 வயதுடைய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டதாக சாவகச்சேரி காவல்துறை, மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டிருந்தது.
இவர் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்த நிலையில் மாணவர் வீசா மூலம் அண்மையிலேயே லண்டனுக்கு சென்றிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நாடு திரும்பியிருந்த இவர் யாழ்ப்பாண நகரப்பகுதியில் வைத்து வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டிருந்தார்.
சுமார் 24 மணித்தியாலங்களுக்கு பின்னர் இவர் கைகள், கண்கள் கட்டப்பட்டு யாழ்ப்பாண புறநகர் பகுதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் இவர் மீட்கப்பட்டது தொடர்பாக குடும்பத்தவர்கள் சாவகச்சேரி காவல்நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
VeNgAi- பண்பாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|