அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கையில் கொள்ளையடிப்பவர்கள் தான் கோடீஸ்வரர்கள்: புதிய ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

Go down

இலங்கையில் கொள்ளையடிப்பவர்கள் தான் கோடீஸ்வரர்கள்: புதிய ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல் Empty இலங்கையில் கொள்ளையடிப்பவர்கள் தான் கோடீஸ்வரர்கள்: புதிய ஆய்வில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

Post by theepan Wed Feb 23, 2011 9:42 pm

இலங்கையில் நோ்மையாக உழைத்துச் சம்பாதித்தவர்களை விட கொள்ளையடித்துச் சொத்துச் சோ்த்தவர்கள் தான் கோடீஸ்வரர்களாக இருப்பதாக புதிய ஆய்வொன்றின் மூலம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் தற்போதிருக்கும் கோடீஸ்வரர்களில் முதல் இருபது இடங்களில் இருப்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் பலரும் கப்பம், கொள்ளையடித்தல், மோசடி என குறுக்கு வழியில் பணம் சோ்த்தவர்களாகவே உள்ளமை தெரிய வந்துள்ளது.
அதிலும் இருவர் சட்டவிரோத வர்த்தகங்கள், அடுத்தவர்களின் காணிகளைப் பலவந்தமாக அபகரித்தல் ஆகியவற்றின் மூலம் பணம் உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் என்பதாக பிரஸ்தாப ஆய்வின் மூலம் மேலும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு குறுக்கு வழிகளின் மூலம் சொத்துச் சோ்ப்பவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதால் அவர்களுக்கு எதிராக எதுவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாதவாறு பொலிசாரும், சட்டத்துறையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் கூட தெஹிவளையின் படோவிற்றை எனும் பிரதேசத்தில் கொள்ளையடிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்துச் சோ்த்திருந்த பதினெட்டே வயதான ஒரு இளைஞன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்
» விரைவில் வெளிவரும் சிறுத்தை
» இலங்கையை பிளவுபடுத்தும் மறைமுக முயற்சியில் இந்தியா! - பாகிஸ்தான் த நேசன் தகவல்
» "நோ்டோ" அமைப்பு குமரன் பத்மநாதனுடையது தான்: அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
» இலங்கையில் இனவாத அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது – நவரட்ன பண்டார

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum