அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சூரிச்சில் கோடரியினால் மனைவியைக் கொன்ற நபர் கைது

Go down

சூரிச்சில் கோடரியினால் மனைவியைக் கொன்ற நபர் கைது Empty சூரிச்சில் கோடரியினால் மனைவியைக் கொன்ற நபர் கைது

Post by Admin Wed Dec 08, 2010 1:21 am

சூரிச்சில் கோடரியைப் பயன்படுத்தி தமது மனைவியை படுகொலை செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
55 வயதான நபர் ஒருவரே இவ்வாறு 52 வயதான தனது மனைவியை படுகொலை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் வீதியில் துரத்தி துரத்தி தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் பணியாற்றும் இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றதாகவும், பின்னர் காவல்துறையினரிடம் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டதென்பது கண்டு பிடிக்கப்படவில்லை.

காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum