அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நோயாளிப் பிள்ளைக்கு பணம் சேகரித்த நபர் மூதாட்டியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட்டம்

Go down

நோயாளிப் பிள்ளைக்கு பணம் சேகரித்த நபர் மூதாட்டியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட்டம்  Empty நோயாளிப் பிள்ளைக்கு பணம் சேகரித்த நபர் மூதாட்டியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓட்டம்

Post by Admin Sun Feb 27, 2011 5:42 am

நோயாளியான தனது பிள்ளைக்கு உதவி செய்யுமாறு கோரி வீடு வீடாகச் சென்று பணம் சேகரித்தவர் வீடொன்றில் தனிமையில் இருந்த மூதாட்டியின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
இந்தச் சம்பவம் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் கடந்த வாரம் இடம் பெற்றுள்ளது.

நண்பகல்வேளை சுமார் 40 வயது மதிக் கத்தக்க நபர் ஒருவர் கடதாசி ஒன்றைக் காட்டி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று தனது பிள்ளை நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உதவி செய்யுமாறும் கோரி பணம் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

வயோதிபப் பெண் ஒருவர் இருந்த வீட்டுக்குச் சென்ற குறிப்பிட்ட நபர் அவரிடம் உதவி கேட்டுவிட்டுப் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் எழுபத்தையாயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஏற்கனவே தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றார்.

வயோதிபப் பெண்ணின் கூக்குரலை அடுத்து அங்கு கூடிய அயலவர்கள் உடனடியாக அப்பகுதியில் தேடுதல் நடத்திய போதும் திருடனைப் பிடிக்க முடியவில்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum