கிழக்கின் பெறுமதியான காணிகள் பலவந்தமாகப் பறித்தெடுக்கப்படுகின்றன: மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க
Page 1 of 1
கிழக்கின் பெறுமதியான காணிகள் பலவந்தமாகப் பறித்தெடுக்கப்படுகின்றன: மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க
கிழக்கின் பெறுமதியான காணிகள் மத்திய அரசாங்கத்தினால் பலவந்தமாகப் பறித்தெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண சபையின் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க குற்றம் சாட்டுகின்றார்.
கிழக்கு மாகாண சபைக்கும் அறிவிக்காமல் அவ்வாறு பறித்தெடுக்கப்படும் காணிகள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பல்வேறு தொழில் முயற்சியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தெடுக்கக் கூடிய கடற்கரையோரங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் இடங்கள் அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.
அதன் பின் பலவந்தமாகப் பறித்தெடுக்கப்படும் காணிகள் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முயன்றால், அதற்குப் பதிலாக பிரஸ்தாப இடங்களைப் பெற்றுள்ள வர்த்தகர்களுக்கு மாகாண சபையால் ஏதேனும் உதவிகள் செய்ய முடியுமா என்று அவர்கள் திருப்பிக் கேட்பதாகவும் அமைச்சர் குறைப்பட்டுக் கொள்கின்றார்.
தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணத்தின் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேலான பெறுமதி மிக்க இடங்கள் அவ்வாறு பலவந்தமாகப் பறித்தெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.
கிழக்கு மாகாண சபைக்கும் அறிவிக்காமல் அவ்வாறு பறித்தெடுக்கப்படும் காணிகள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பல்வேறு தொழில் முயற்சியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தெடுக்கக் கூடிய கடற்கரையோரங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் இடங்கள் அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.
அதன் பின் பலவந்தமாகப் பறித்தெடுக்கப்படும் காணிகள் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முயன்றால், அதற்குப் பதிலாக பிரஸ்தாப இடங்களைப் பெற்றுள்ள வர்த்தகர்களுக்கு மாகாண சபையால் ஏதேனும் உதவிகள் செய்ய முடியுமா என்று அவர்கள் திருப்பிக் கேட்பதாகவும் அமைச்சர் குறைப்பட்டுக் கொள்கின்றார்.
தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணத்தின் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேலான பெறுமதி மிக்க இடங்கள் அவ்வாறு பலவந்தமாகப் பறித்தெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|