அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவு தமிழருக்கு பேரிழப்பு - சிறிதரன் பா.உ. அனுதாபம்

Go down

கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவு தமிழருக்கு பேரிழப்பு - சிறிதரன் பா.உ. அனுதாபம் Empty கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவு தமிழருக்கு பேரிழப்பு - சிறிதரன் பா.உ. அனுதாபம்

Post by Admin Wed Dec 22, 2010 4:20 am

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 ஆவது வயதில் கொழும்பில் காலமானார். இவரின் இழப்பானது தமிழுக்கும், தமிழருக்கும் பேரிழப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.

1965 ல் தமிழரசுக் கட்சியின் சார்பில் கிளிநொச்சியில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

தனது கடும் முயற்சியின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வியில் பல மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்ததுடன் பல கிராமங்களில் மாகாவித்தியாலயங்கள் உருவாகவும் காரணமாக இருந்தார்.

தமிழோடு அரசியலை வளர்ப்பதிலும், அரசியலோடு தமிழை வளர்ப்பதிலும் இவரது பங்கு அளப்பரியது.

நாடாளுமன்றத்தில் இருக்கும் போதே தமிழ்மறை கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தியதுடன், அவ்வமைப்பின் ஊடாக 14 ற்கும் மேற்பட்ட திருக்குறள் மாநாடுகளை நடத்தியுள்ளார்.

இவரின் இழப்பானது தமிழுக்கும், தமிழருக்கும் பேரிழப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
» கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரி அறவீடு செய்வதனால் வடக்கு மக்கள் பாதிப்பு – சிறிதரன்
» அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் 'பெற்றி' அம்மையாருக்கு கண்ணீர் அஞ்சலி! இறுதி வணக்க நிகழ்வு விபரம்
» உழைத்தலும் உழைத்தலுக்கான போராட்டங்களுமே தமிழர் இருப்பை உறுதி செய்யும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். 2011 மே நாள் செய்தி
» அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum