அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பேராயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசரை தெரிவு செய்யும் கர்தினாலாக தெரிவு

Go down

பேராயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசரை தெரிவு செய்யும் கர்தினாலாக தெரிவு Empty பேராயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசரை தெரிவு செய்யும் கர்தினாலாக தெரிவு

Post by Admin Thu Oct 21, 2010 3:51 am

பாப்பரசர் ஒருவரை தெரிவுசெய்யும் அதிகாரம் கொண்ட வத்திக்கான் “கர்தினால்” கல்லூரிக்கு இலங்கையில் இருந்து பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாப்பரசர், 16 பெனடிக்ட் இந்த தெரிவை இன்று அறிவித்துள்ளார்

இவரை தவிர இன்று, 19 “கர்தினால்கள்” பாப்பரசரால் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள பேராயரின் அருட்பணியாளர் இமானுவேல் பெர்ணாண்டோ, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை தவிர ஜேர்மனி போலந்து, சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் கொங்கோ குடியரசு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் இத்தாலியின் அதிகமானவர்களும் இந்த 20 கர்தினாலாக பெயரிடப்பட்டுள்ளனர்

வத்திக்கானில் தற்போது 102 கர்தினால்கள் செயற்படுகின்றனர்.

இந்தநிலையில் இன்று மேலும் 20 பேர் இன்று பெயரிடப்பட்டனர்.

இதற்கு முன்னர் இலங்கையில் இருந்து வணக்கத்துக்குரிய தோமஸ் பென்ஜமின் குரே 20 வருடங்களுக்கு முன்னர் கா்தினலாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இலங்கையர் ஒருவர் கர்தினாலாக பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவுசெய்யப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கெதிரான வெளிநாட்டுச் செயற்பாடுகளின் மூலம் தமிழர்கள் எதனையும் பெறமுடியாது: கர்தினால் மல்கம் ரஞ்சித்
» குரல்களை மாற்றம் செய்யும் மென்பொருள்
» சூழ்ச்சி செய்யும் கேரளாவுடன் பேச்சுவார்த்தை கூடாது:வைகோ
» இந்திய முக்கிய அரசியல்வாதிகளைப் படுகொலை செய்யும் திட்டம் எம்மிடமில்லை: புலிகள் மறுப்பு
» சகல மக்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப் பரவலாக்கல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஆஸி.பாராளுமன்ற உறுப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum