அம்பாறை மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாம் மூடப்பட்டுள்ளது
Page 1 of 1
அம்பாறை மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாம் மூடப்பட்டுள்ளது
அம்பாறையின் திருக்கோயில் பிரதேச மக்களுக்குப் பெரும் தொல்லையாக அமைந்திருந்த காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை முகாம் தற்போது முற்றாக மூடப்பட்டுள்ளது.
கடந்த இருபத்தியொரு ஆண்டுகளாக காஞ்சிரங்குடாவில் செயற்பட்ட விசேட அதிரடிப்படை முகாம் காரணமாக திருக்கோயில் பிரதேசத்தை அண்டிய தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்கள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருந்தனர்.
அதற்கு மேலதிகமாக அந்த முகாம் அமைக்கப்படுவதற்கு தனியார் கட்டிடங்களே பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கிருந்து முகாம் அகற்றப்பட்டுள்ளதால் இருதரப்பு மக்களும் பெரும் நிம்மதியை உணர்ந்துள்ளனர்.
ஆயினும் முகாமை விட்டு அகன்று சென்ற படையினர் அங்கிருந்த கட்டிடங்களின் கதவு, ஜன்னல்கள் போன்றவற்றைக் கழற்றிச் சென்றுள்ளமை குறித்து கட்டிடங்களின் உரிமையாளர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தம் முடிவுற்ற பின் தற்போதைக்கு அம்பாறை மாவட்டத்தில் இயங்கிய நான்கு அதிரடிப்படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த இருபத்தியொரு ஆண்டுகளாக காஞ்சிரங்குடாவில் செயற்பட்ட விசேட அதிரடிப்படை முகாம் காரணமாக திருக்கோயில் பிரதேசத்தை அண்டிய தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்கள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருந்தனர்.
அதற்கு மேலதிகமாக அந்த முகாம் அமைக்கப்படுவதற்கு தனியார் கட்டிடங்களே பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கிருந்து முகாம் அகற்றப்பட்டுள்ளதால் இருதரப்பு மக்களும் பெரும் நிம்மதியை உணர்ந்துள்ளனர்.
ஆயினும் முகாமை விட்டு அகன்று சென்ற படையினர் அங்கிருந்த கட்டிடங்களின் கதவு, ஜன்னல்கள் போன்றவற்றைக் கழற்றிச் சென்றுள்ளமை குறித்து கட்டிடங்களின் உரிமையாளர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தம் முடிவுற்ற பின் தற்போதைக்கு அம்பாறை மாவட்டத்தில் இயங்கிய நான்கு அதிரடிப்படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|