அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இறந்த உடலிலிருந்த நகைகள் பிணவறை அதிகாரியினால் சூறை! போகவந்தலாவையில் சம்பவம்

Go down

இறந்த உடலிலிருந்த நகைகள் பிணவறை அதிகாரியினால் சூறை! போகவந்தலாவையில் சம்பவம்  Empty இறந்த உடலிலிருந்த நகைகள் பிணவறை அதிகாரியினால் சூறை! போகவந்தலாவையில் சம்பவம்

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:21 am

போகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 02.01.2011 அன்று இறந்த பெண்ணொருவரது உடலில் அணிந்திருந்த தாலி மற்றும் தோடு என்பன பிணவறைக்கு பொறுப்பான அதிகாரியால் களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

போகவந்தலாவை பிரதேசத்துக்குட்பட்ட தோட்டத்தில் வாழும் 50 வயதுடைய புஸ்பவள்ளி என்ற பெண் சுகவீனம் காரணமாக 31.12.2011 அன்று போகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகள் பலனின்றி 02.01.2011 மாலை இறந்துவிட்டார்.

குறித்த பெண் இறந்த சந்தர்ப்பத்தில் பெண்ணின் மகள் இருவர் மட்டுமே அவரின் அருகில் இருந்துள்ளனர். அவர்கள் தாயார் இறந்த கவலையில் அவர் அணிந்திருந்த நகைகளைப் பற்றி கவனிக்கவில்லை.

அந்நிலையில், பிணவறை பொறுப்பதிகாரி பூதவுடலை பிணவறைக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பின் குறித்த அதிகாரியிடம் உறவினர்கள் நகைகள் குறித்து கேட்கப்பட்டபோது இறந்த பெண் நகைகள் ஒன்றும் அணிந்திருக்கவில்லை என்று அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.

பின் மறுநாள் காலை சில உறவினர்களுடன் சென்று மீண்டும் கேட்கப்பட்டபோது தாலி மட்டும்தான் இருந்ததாக கூறி தாலியை கையளித்திருக்கின்றார்.

இது தொடர்பாக வைத்தியசாலை உயரதிகாரியிடமும் போகவந்தலாவை பொலிஸ் அதிகாரியிடமும் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவர்கள் பெற்று தருவதாக கூறி ஒரு வாரம் ஆகிய நிலையிலும் இதுவரையிலும் நகைகள் உரியவர்களிடம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி நோயாளர்களை பார்வையிட செல்பவர்களிடத்தில் நோயாளிகள் தங்கியிருக்கும் அறை மேற்பார்வையாளர்கள், காவலாளிகள் பணம், சிகரட் போன்ற பொருட்களையும் வலுக்கட்டாயமாக பெற்றுக்கொள்வதாகவும் கொடுக்க மறுக்கின்ற பட்சத்தில் அவ்வாறான நோயாளிகளை பார்வையிட செல்பவர்களிடத்தில் பாரபட்சமாக நடந்துக்கொள்வதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ்வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை எனவும் அதில் திருப்பதிகரமான நிலை இருக்கவில்லை எனவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தினை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனத்திற் கொண்டு இவ்வாறான அருவருக்கத்தக்க ஈனத்தனமான செயல்களை தடுக்க முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை – திருகோணமலையில் சம்பவம்
» குளிர்பானத்தைக் கொடுத்து இளைஞர்களிடம் பணம், நகைகள் கொள்ளை! கொழும்பு பஸ்நிலையத்தில் சம்பவம்
» நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை - வவுனியாவில் சம்பவம்
» பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தமிழ்த்தாய்: சுவிஸில் சம்பவம்
» ஜயலத் தாக்கப்பட்ட சம்பவம்: பாராளுமன்றில் இன்று விசாரணைக்கு சபாநாயகர் அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum